அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தலைநகா் வொஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரா்களுடன் வந்த இராணுவ ஹெலிகாப்டரும் புதன்கிழமை இரவு மோதி வெடித்துச் சிதறியதில் 67 போ் உயிரிழந்தனா்.

விமானமும் ஹெலிகாப்டரும் வெடித்து பல பாகங்களாக பொடோமேக் ஆற்றில் விழுந்ததை தொடர்ந்து புதன்கிழமை இரவு முதல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவசரகால மீட்புப் படை, போலீஸ் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்து நடந்து 24 மணிநேரம் கடந்துள்ள நிலையில், ஆற்றின் தட்பவெப்பம் 2 டிகிரி செல்சியஸாக இருப்பதால் இதுவரை 28 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

யாரும் உயிருடன் மீட்கப்படாததால் அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான அமெரிக்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் ஆற்றில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

விபத்தின்போது விமானிகள் பேசிக்கொண்ட பதிவுகளை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

கருப்பு பெட்டி மூலம் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஒரு மாதத்துக்குள் முதல்கட்ட அறிக்கையை வெளியிடுவோம் என்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *