
இன்று (11) நள்ளிரவுக்குப் பிறகு இடம்பெறும் 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டால், பொலிஸாருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்படி காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் – 0112421111
பொலிஸ் அவசர இலக்கம் – 119 இ
லங்கைப் பரீட்சைத் திணைக்களம் – 1911
பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை – 011 278 4208 / 011 278 4537 2024
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் நடாத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் உதவி வழங்குதல், இன்று மார்ச் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படுவதாக பரீடசைகள் திணைக்களம் கடந்த 7 ஆம் திகதி அறிவித்திருந்தது.
இம்முறை, சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.