சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சுற்றுலாப் பயணிக்கு முறையான முதலுதவி இல்லாததால் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை சிகிரியாவை பார்வையிடுவதற்கான பயணச்சீட்டு 11,000 ரூபா ஆகும்.

ஆனால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான முதலுதவி வசதிகள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிகிரியாவில் முறையான முதலுதவி வசதிகள் இல்லாமை காரணத்தினால் கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட மொத்தம் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுற்றுலா சங்கமொன்றின் செயலாளர் பி.விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் தலங்களில் முறையான முதலுதவி வசதிகளை வழங்குவது தொடர்பில் சுற்றுலாத் துறைசார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *