நாட்டின் ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் சென்று சேவையாற்ற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் நடமாடும் சேவைகளை முன்னெடுக்க வேண்டியதில்லை எனவும் நாட்டின் தலைவரும் அரசாங்கமும் இந்த சேவைகளை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்கள் மத்தியில் சென்று சேவையாற்றத் தவறியதனால் ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக் கூடிய வழிமுறைகளை அரசாங்கம் உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மாத்தறை கும்புருபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது சஜித் பிரேமதாச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *