கடந்த 2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், நேற்று (21) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை ரி-56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கி வந்த ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என இனங்கண்டு கொண்டதையடுத்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *