
ஐ.பி.எல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி தலைவர் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது.
முதல் ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ஓட்டங்களையும், வில் ஜாக்ஸ் 11 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி 36 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ்-திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி 51 ஓட்டங்கள் சேர்த்தது. சூர்யகுமார் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 31 ஓட்டங்களில் வெளியேறினார்.
இருவரையும் நூர் அகமது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.கடைசி கட்டத்தில் தீபக் சஹர் 28 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்களை எடுத்தது.சென்னை அணி சார்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.