
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தனிநபர் வருமான வரி விதிப்பை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை மாதாந்திர வருமானம் ஒரு இலட்சம் ரூபாய் பெறும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தனிநபர் வருமான வரி, இன்று முதல் 150,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறைந்த வருமானம் பெறும் பலருக்கு வரி சலுகைகள் கிடைக்கும் என அரசு சுட்டிக்காட்டுகிறது
இதேவேளை எந்தவொரு வைப்புத்தொகை உரிமையாளருக்கும் செலுத்தப்பட வேண்டிய வட்டி அல்லது தள்ளுபடி செலுத்துதல்களுக்கு 10 சதவீத விகிதத்தில் முன்பண வருமான வரியை குறைப்பதை இன்று முதல் நடைமுறைபடுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல், இலங்கையில் உள்ள எந்தவொரு நபருக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டி, தள்ளுபடி மற்றும் இஸ்லாமிய நிதி பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்ட வருமான செலுத்துதல்களுக்கு, முகவராக செயல்படும் எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனமும் 10 சதவீத விகிதத்தில் முன்பண வருமான வரியை குறைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்கு விதிக்கப்படும் முன்பண வருமான வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.