மார்ச் 3 ஆம் திகதி முதல் தேர்தல் சட்டங்களை மீறியதற்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 13 வேட்பாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், 42 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் 11 வாகனங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (08) காலை 6 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை வன்முறை சம்பவம் மற்றும் தேர்தல் சட்ட மீறல் தொடர்பான 12 சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளன. குறித்த புகாரின் அடிப்படையில், ஒரு வேட்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், மார்ச் 3 ஆம் திகதி முதல் மொத்தம் 24 வன்முறை சம்பவங்கள் மற்றும் 99 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பொலிஸாரிடம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *