எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரிகளுக்கு இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

மேற்படி வேட்புமனுக்களை நிராகரித்ததற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தாக்கல் செய்த பல மனுக்கள் இன்று (10) காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹம்மட் லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்களின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *