கண்டி, ஸ்ரீ தலதா வழிபாட்டு வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

மாரடைப்பு காரணமாக அந்த அதிகாரிகள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் நினைவுச்சின்னத்தின் சிறப்பு கண்காட்சியான ஸ்ரீ தலதா வழிபாடு, தொடர்ந்து எட்டாவது நாளாக இன்று (25) நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 18 ஆம் திகதி ஜனாதிபதியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்வு ஏப்ரல் 27 ஆம் திகதி வரை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நிகழ்விற்கு ஏராளமான மக்கள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *