இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் உப்புக்கான முதல் தொகுதி அடுத்த வாரம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலகா தெரிவித்துள்ளார்.

தேசிய உப்பு நிறுவனம் இறக்குமதி செய்த உப்பு கையிருப்பில் ஒரு பகுதியை வாங்கி மக்களுக்காக உப்பு சந்தைக்கு வெளியிட தனது நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறிய தலைவர் நந்தனதிலகா, லங்கா உப்பு நிறுவனம் இந்தியாவிலிருந்து 10,000 மெட்ரிக் தொன் உப்பையும் இறக்குமதி செய்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று (14) லங்கா உப்பு நிறுவனம் 400 கிராம் கொண்ட ஒரு இலட்சம் உப்பு பக்கெற்றுக்களை லங்கா சதோசாவிற்கு வழங்கியதாகத் தலைவர் டி. நந்தனதிலகா தெரிவித்தார், மேலும் இன்று (15) லங்கா சதோசாவிற்கு ஒரு இலட்சம் உப்பு பக்கெற்றுக்களைத் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *