
போலி லேபிள் இடப்பட்ட வாசனை திரவியங்களை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இராஜகிரியவில் உள்ள இரண்டு நிறுவனங்கள் மீது நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பொருட்கள், இணையவழியில் நாடு முழுவதும் உள்ள முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், அண்மைய சோதனையின் போது, வாசனை திரவியங்களின் இறக்குமதியை உறுதிப்படுத்தும் எந்த ஆவணங்களையும் விற்பனையாளர்கள் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.