
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை தாக்கியதில் மனைவி உயிரிழந்ததாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவர் தாக்குதலால் உயிரிழந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, ஹெட்டிபொல பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹதுபிட்டிய, உடவெலவத்தையைச் சேர்ந்த 40 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரைக் கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.