Author: admin

பிலியந்தலையில் தீ விபத்து

கொழும்பு-பிலியந்தலை வீதியில், போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் இன்று (04) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயை கட்டுப்படுத்துவதற்காக தெஹிவளை கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்துள்ளனர். மேலும், தீயை முழுமையாக அணைப்பதற்காக கொழும்பு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில்…

மின்சார சட்டமூலத்தை எதிர்த்து மனுத்தாக்கல்

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரச் சட்ட மூலத்திலுள்ள சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக்கோரி இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 06 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர்நீதிமன்றம் நேற்று (02) உத்தரவிட்டது.…

சைபர் தாக்குதலால் பாதிப்பில்லை – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் குறுஞ்செய்தி சேவை மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் எந்தவொரு தரவுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்த சபை தெரிவித்துள்ளது. சபையின் கூடுதல் பொது முகாமையாளர் பிரதீப் ஹேரத் கூறுகையில், தற்போது தரவு முறைமையின்…

திருடர்களை பிடிப்பதாக கூறி பிதற்றுகிற அநுர அரசு – சாடுகிறார் சாகர

திருடர்களைப் பிடிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இதுவரை பிடித்த திருடர்கள் ஒருவருமில்லை. எனினும் மக்களுக்கு உயிர்வாழ முடியாதளவுக்கு அவர்களில் வயிற்றிழடித்துள்ளனர். மக்கள் அடுத்து வேளை உணவை உண்ண முடியாதளவுக்கு வாழ்க்கைச் செலவை அதிகரிக்கச் செய்துள்ளது என்று சிறிலங்கா…

முன்னாள் அமைச்சர் கெஹெலிய, அவரது மகன் ரமித்துக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை இன்று (03) பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை…

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் – சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பல்கலைகழகத்திற்கு முன் போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடம் இருந்து 480 மில்லிகிராம் கொக்கைன், 71 கிராம் குஷ், 850 மில்லிகிராம் ஐஸ்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை…

அசோக்க சேபாலவுக்கு விளக்கமறியல்

தலவாக்கலை லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக்க சேபாலவை ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக இன்று (02) காலை இலஞ்ச ஊழல்…