Month: January 2025

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் 2025 இல் நடைமுறைப்படுத்தல்

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று…

அனைத்து எம்.பிக்களுக்கும் வாகனம் வழங்க திட்டம்

அரசாங்கம் விரைவில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று (20) இரவு தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். எம்.பி.க்களுக்கு இனி…

மின் கட்டணக் குறைப்பால் பொருட்களின் விலைகள் குறையும் – சிறுதொழில் வல்லுநர் சங்கம்

மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பொருட்களின் விலை குறையும் என்று அகில இலங்கை சிறுதொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது 17 ஆம் திகதி…

ரயிலில் மோதி யுவதி உயிரிழப்பு

மன்னார் தோட்டக்காடு பகுதியில் நேற்று (20) கடும் மழையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக உறவினர் வீட்டுக்குச் சென்ற யுவதி ஒருவர் ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய எஸ். பிரஷாந்தி என்ற யுவதியே இவ்வாறு…

கரையோர ரயில் சேவை பாதிப்பு

தெஹிவளைக்கும் கல்கிசைக்கும் இடையிலான ரயில் பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது

பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பட்ட அர்ச்சுனா எம்.பி

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவுடன் இன்று (21) காலை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முரண்பட்டுள்ளார். அநுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதற்காக வந்திருந்த வேளையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,சம்பூர் பிரதேசத்தில் சூரிய சக்தி மின்னுற்பத்தி…

இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொட பகுதியில் நேற்று (20) இரவு இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தானை, நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில்…

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (20) மாலை 4:00 மணி முதல் நாளை (21) மாலை 4:00 மணி வரை…