அரசாங்கம் விரைவில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று (20) இரவு தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எம்.பி.க்களுக்கு இனி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், அனைத்து எம்.பி.க்களுக்கும் வாகனங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும், இதனால் தனிப்பட்ட வாகன இறக்குமதி அனுமதிகளுக்கான தேவை நீக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *