Month: April 2025

தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் – பிள்ளையானை காப்பாற்றும் துடிக்கும் கம்பன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, ராஜபக்சக்களை ஓரங்கட்டிவிட்டு போரை வென்ற தேசபக்தர் என, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) குறிப்பிட்டுள்ளார்.பயங்கரவாத தடை சட்டத்தின் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை, சட்டத்தரணியான கம்பன்பில சந்தித்த பின்னர், அவரின்…

இலங்கையில் பயணிகளுக்கான அறிவிப்பு

விசேட போக்குவரத்து திட்டத்தினை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குப் பயணித்த பொது மக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை இந்த…

வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு வரி

வெளிநாடு வாழ் தனிநபர்களின் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது. இலங்கையில் வசிக்காத தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வற்…

முச்சக்கர வண்டி – தனியார் பஸ் விபத்து; அறுவர் படுகாயம்

ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில், நேற்று (16) இரவு அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று தனியார் பஸ்ஸுடன் மோதியதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர்,…

விலக்களிக்கப்பட்ட திரவப் பால்,தயிர்

வற் (VAT) வரி எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) தெரிவித்துள்ளது

தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் 18 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 3 ஆம் திகதி முதல் இதுவரை 168 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 132 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தாக்குதல்கள் உள்ளிட்ட ஏனைய சம்பவங்கள்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும்.தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்…

கொங்கோவில் படகு விபத்து – 50 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடமேற்கு கொங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு புறப்பட்டது. அந்தப்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கரந்தெனிய, திவியகஹவெல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட தகராறின் விளைவாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி…