Month: May 2025

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பிற்பகல் 1:00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என…

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு

கொட்டாவை மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு மேயர் தெரிவு தொடர்பில் ஐ.தே .க விசேட தீர்மானம்

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 13 உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 பேரும்…

கொழும்பு – லாகூர் விமான சேவைகள் இரத்து

பாதுகாப்பு காரணங்களுக்காக , இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

தலசீமியா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 வரையிலான குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்படுவதாக அமைச்சின் தொற்று அல்லாத நோய்கள் பிரிவின் பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் சமிதி சமரகோன்…

புதிய எம்.பியாக சமந்த பதவியேற்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜெயவீரவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, கேகாலை மாவட்டத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளில் 50…

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை மே 20 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஒன்றிணைய தயார் – சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைப்போம். அதன் ஊடாக வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், கொள்கை ரீதியானதுமான சிறந்த மக்கள் சேவையை பெற்றுத் தருவோம். இதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும்…

கூட்டணிக்கு NPP தயாரா?

மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணியை அமைத்து, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி…