Month: May 2025

தேசபந்து தென்னகோன் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் முறைகேடு மற்றும் பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட குழு இன்று (19) முதல் தனது விசாரணையைத் தொடங்கவுள்ளது. குறித்த குழுவானது கடந்த சில வாரங்களாக பாராளுமன்ற வளாகத்தில் கூடி…

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது…

கண்டியில் காய்கறிகளின் விலை உயர்வு

கண்டியில் காய்கறிகளின் விலை மிக உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கண்டி மற்றும் கண்டியை அண்மித்துள்ள அக்குறணை, மடவளை, வத்துகாமம் போன்ற பல இடங்களில் காய்கறிகளின் விலை மிக அதிகரித்துள்ளன. அண்மை காலத்தில் மிக மலிவாகக் கிடைத்த புடலங்காய் ஒரு கிலோ 500…

சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் பெய்து வரும் தொடர் மழைகாரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய, கண்டி மாவட்டத்தில் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தில் புலத்கோஹுபிட்டிய, ருவன்வெல்ல,…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும்…

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவுடன் நிறைவு

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி, இன்று முதல் ரயில் சேவைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன…

நாரஹேன்பிட்டியில் துப்பாக்கிச்சூடு

நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது…

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: 12 பேர் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் பிறப்பித்த உத்தரவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் நேற்று(16) விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, அவர்கள் மீது…

கல்கிசை துப்பாக்கிச் சூடு

கல்கிஸ்ஸை காலி வீதிக்கு அருகில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பன்னிப்பிட்டியவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் இறந்தவர் தெஹிவளை, ஓபன் பிளேஸில் வசிக்கும் 19…

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை: சீனாவிலும் பரவுகிறது

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல…