பலாங்கொடை கல்தொட்ட, மிரிஸ்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் இன்று (22) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

46 வயதுடைய மொஹமட் சியாமி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி சாந்த ஜயசேகர உடற்கூற்று பரிசோதனையை மேற்கொண்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *