
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட ஆலோசனையை நாளை (06) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட பிரேரணையை கையளித்ததன் பின்னர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
மின் கட்டணத்தை எவ்வளவு குறைக்க வேண்டும் என்பது குறித்து இன்று இறுதிக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.