
லங்கா சதொச கடைகளில் இன்று (6) முதல் வாடிக்கையாளர்களுக்கு நாடு அரிசி மற்றும் தேங்காய்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார்.
இதன்படி வாடிக்கையாளர் ஒருவர் ஐந்து கிலோ அரிசியை 220 ரூபாவிற்கும், மூன்று தேங்காய்களை 130 ரூபாவிற்கும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரிசி மற்றும் தேங்காய் சதொச ஊடாக நுகர்வோருக்கான சந்தைப்படுத்தல் நேற்று (5) கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டதாக டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார்.