
பருத்தித்துறை – திருமால்புரம், வல்லிபுரம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த பென்சிலை எடுக்க இறங்கிய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ரஜீவன் சுஜீ என்கின்ற மூன்றரை வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த குழந்தை தனது கையில் பென்சில் ஒன்றுடன் சென்றுகொண்டிருந்தபோது அது தவறி நீர்தேக்கத்தில் வீழ்ந்துள்ளது. அதனை எடுப்பதற்காக நீர்த்தேக்கத்தில் இறங்கியவேளை குழந்தை நீரில் மூழ்கியது.
குழந்தையை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை ஏற்கனவே இறந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்