
கல்கிசை வட்டரப்பல வீதியில் 36 மற்றும் 20 வயதுடைய இருவர் இன்று அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்,.
