தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புலாகம பிரதேசத்தில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

05. 8 அங்குலம் நீளமான டைனமைட் ஜெல் பொட்டுகள், 04 செ.மீ நீளம் கொண்ட 10 டெட்டனேட்டர்கள் மற்றும் 500 கிராம் அம்மோனியாவுடன் சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புலுகம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *