
மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் மூவர் கொண்ட குழு எதிர்வரும் 11 ஆம் திகதி சாட்சியங்களை கோர தீர்மானித்துள்ளது.எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு இந்தக் குழு கூட உள்ளது.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான இந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்கள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவரான முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரான உயர் நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க ஆகியோர் அடங்குகின்றனர்.