
சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி மற்றும் லக்ஷ்மன் நிபுணாராச்சி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பத்தியின் பெயர் பரிசீலிக்கபப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.