கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட ஞானசார தேரருக்கான வழக்கின் தீர்ப்பு இன்று (19) அறிவிக்கப்பட இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சுகயீனம் காரணமாக ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, தீர்ப்பின் தீர்ப்பை ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *