
மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மினுவாங்கொடை, பட்டன்டுவ பிரதேசத்தில் இன்று (26) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு 9எம்எம் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.