
பொலனறுவை மாவட்டம் உட்பட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும் கவுதுல்ல குளத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மதுரு ஓயா மற்றும் குடா ஓயா ஆகியவை நிரம்பி வழிவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை காரணமாக பல பகுதிகளில் கிட்டத்தட்ட 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.