
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்துவது குறித்து பொது அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விழிப்புணர்வு திட்டத்திற்காக அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.