
சபரகமுவ, மத்திய, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த வானிலை முன்னறிவிப்பானது இன்று (06) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கம் ஏற்படும் போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்.