ஊவா மாகாண சபையின் நிதியை வங்கியில் இருந்து எடுத்து, அதை தொடர்ச்சியான அல்லது மூலதனச் செலவினங்களுக்குச் செலவிடுவது குற்றமல்ல என இன்று லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின் போது ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண சபை நிதியை வங்கியில் இருந்து திரும்பப் பெற்றமை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.

நான் ஆணைக்குழுவிடம் ஒரு வாக்குமூலம் அளித்து எனது கருத்தை விளக்கினேன், இதன் மூலம் வங்கிக் கணக்கில் நிதியை வைத்திருப்பது தான் உண்மையான குற்றம் என்று நான் கூறினேன் என ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *