
மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பஸ் விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேராக் மாநிலத்தில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் பஸ்ஸில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
பேராக் மாநிலத்தையும் கிளந்தான் மாநிலத்தையும் இணைக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது இன்னொரு வாகனத்துடன் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.