Category: LOCAL NEWS

ஜனவரி முதல் மீண்டும் வாகன இறக்குமதி

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் நாட்டிற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்யக் கூடிய சூழல் இருக்கும் என தாம் நம்புவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், இறக்குதிக்கான பணத்தை மத்திய வங்கி…

பொதுத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய சுயேச்சை குழுக்களின் விபரம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள 122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 36 சுயேச்சைக் குழுக்கள் நேற்றைய தினம் (04) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்…

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் குறித்த பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது

19 வருடங்களின் பின் திறக்கப்பட்டுள்ள வீதி

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டி மெல் மாவத்தை செயின்ட் மைக்கேல் சுற்றுவட்டத்திலிருந்து அலரிமாளிகையை ஒட்டிய ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையிலான பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக 2005 இல் மூடப்பட்டது. 19 வருடங்களின் பின்னர், பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டினால் இந்த வீதி நேற்று (04)…

இலஞ்சம் பெற்ற நால்வர் கைது

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது மூன்று பஸ்களின் உரிமையை மாற்றுவதற்கு 3 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில்…

யானை சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நடத்திய கலந்துரையாடலின் போதே ஐக்கிய தேசியக் கட்சி இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் செய்ய அநுரவுக்கு அழைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான அழைப்பிதழை இந்திய பிரதமர் சார்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் வழங்கியுள்ளார்.

பஸ் மோதி ஒருவர் பலி

திவுலபிட்டியவில் பஸ் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.திவுலபிட்டிய நைவல தோட்டத்தில் நேற்று (05) வீதியின் நடுவில் பாதுகாப்பின்றி உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது திவுலப்பிட்டியிலிருந்து நைவல நோக்கி பயணித்த பஸ் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழைப்பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை இடியுடன் கூடிய…

சஜித் பிரேமதாசவை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர்

இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் முன்னாள் எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.