இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேற்கு…

கொழும்பு பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்

பொதுத் தேர்தல் செலவீனங்கள் – நாளை முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நாளை (15) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை காலை 9.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் வளாகத்தில் நடைபெறவுள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசியல் கட்சிகளின்…

பாடசாலைகளுக்கு தொடர்ந்து விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கல்வி…

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 3 ஜனாதிபதி வேட்பாளர்கள்

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (13) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், பத்தரமுல்லே சீலரத்ன தேரர், முன்னாள்…

அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத் தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாது மோசடி செய்த சம்பவத்தில் டபிள்யூ.எம்.…

ஐசிசியின் செப்டெம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக மெண்டிஸ்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செப்டெம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செப்டெம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ட்ரவிஸ் ஹெட் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ்…

நுவரெலியாவில் பாழடைந்த நிலையில் மற்றுமொரு அரச வாகனம் கண்டுபிடிப்பு

முன்னாள் போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிந்ததை இன்று (14) நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாகனம் நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள நுவரெலியா வலயக்…

கொதிகலன் வெடித்து ஒருவர் பலி – 19 பேர் படுகாயம்

கம்பஹா படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இயங்கிய கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்து சிதறியிருக்கலாம் என பொலிஸார்…

இறுவட்டு வடிவில் பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் – தேர்தல் ஆணைக்குழு

2024 பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை இறுவட்டு வடிவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடுகையில், 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இந்த இறுவட்டைப் பெற முடியும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின்…