இடி மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் பல மாகாணங்களுக்கு கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்ககை விடுத்துள்ளது மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை…
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 39,137 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை 16,511 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையளம் காணப்பட்டனர். இம்மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு…
பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் இல்லை
முட்டையின் விலை குறைக்கப்பட்டாலும் முட்டை தொடர்பான பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பேக்கரி உற்பத்திகளின் விலைகள் திருத்தப்படும் என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன…
ஐஸ், கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரரான தனுஷ் புத்திக என்ற “அங்கொட ஜிலே”வின் பிரதான உதவியாளரை ஐஸ், கேரள கஞ்சாவுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து 25 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 51 கிராம் கேரள கஞ்சாவும்…
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி அறிவிப்பு
பாராளுமன்ற பொதுத் தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1 முதல் 8 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கல்கிஸ்ஸ – படோவிட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருடளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவரே…
தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை அங்கு வந்த இலங்கை கடற்படை…
மர தளபாட தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
மொரட்டுவ பிரதேசம் எட்வர்ட் மாவத்தையில் அமைந்துள்ள மர தளபாட தொழிற்சாலையில் இன்று (29) அதிகாலை 1.30 மணியளவில் திடீரென தீ பரவியுள்ளதாக மொரட்டுவ நகரசபை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நளீன் துல்சிறி குமார தெரிவித்துள்ளார். தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும்…
போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
கிரிபத்கொட பிரதேசத்தில் போலி ஆவணங்களை தயாரித்து ஒரு கோடியே முப்பது இலட்சத்துக்கு காரை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கந்தானை மற்றும் பமுனுகம பிரதேசத்தை சேர்ந்த 37 மற்றும் 39…
ரைஸ், கொத்து விலை குறைப்பு
நாடளாவிய ரீதியில் ரைஸ், கொத்து ரொட்டியின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.