Month: September 2024

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி!!!

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் DLS முறைப்படி அவுஸ்திரேலிய அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரினை அவுஸ்திரேலிய அணி 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியது. கவுண்டி…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் – கல்வியமைச்சின் தீர்மானத்தில் மாற்றமில்லை

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி-1 வினாத்தாளில் கசிந்துள்ள மூன்று கேள்விகளுக்கு முழு புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மாற்றப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் நடத்தப்பட்ட பரீட்சை நிலையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

முகநூல் விருந்து : 16 மாணவர்கள் கைது

முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 16 மாணவர்களை கைது செய்துள்ளனர். றாகம பொலிஸார் நேற்று மாலை முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து 18 வயதுக்குட்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நுகவெல கெசல்வத்தையில் உள்ள கேரேஜ் ஒன்றில் இரகசியமாக ஒன்று கூடுவதாக…

ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு,…

அடுத்த ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ள திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் பரீட்சை நடைபெறவுள்ள திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம்…

புதிய அமைச்சரவை இன்று கூடுகிறது

புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று (30) மாலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது. இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு, அது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்.

புதிய அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில்…

வரி செலுத்தாதவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை அனைத்து வருமான வரிகளையும் செலுத்தி முடிக்க திணைக்களம் அவகாசம் வழங்கியுள்ளதுடன், உத்தரவை…

தேசியப் பட்டியலுக்கு உத்தரவாதம் இல்லை! சஜித் இறுக்கமான நிலைப்பாடு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகள், தேர்தலுக்கு முன்னரே கோரும் தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதமளிக்காதிருக்க கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் குறித்த லொறி பொலிஸாரின் உத்தரவை மீறி…