Month: May 2025

முன்னாள் சதொச தலைவர் நலின் பெர்னாண்டோக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

ஜனாதிபதி தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்குவிநியோகிக்க கரம் (Carrom) மற்றும் தாம் (Checkers/Daam) விளையாட்டு பலகைகள் இறக்குமதி செய்ததில் அரசுக்கு கோடிக்கணக்கான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர்…

சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு பணமோசடி செய்த நபர் கைது

சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு மோசடி செய்ததாக ஹல்துமுல்ல பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நேற்று (28) பிற்பகல் பலாங்கொடை நகரில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு…

கொழும்பில் கஜ முத்துடன் இருவர் கைது

170 கிராம் கஜமுத்துவை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள், கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டு, கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கொழும்பு கொம்பனி வீதி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் நேற்று (28)…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டில் இன்று (29) மாலை முதல் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை…

மருத்துவ ஆய்வக உதவியாளர் நியமனத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

இணை சுகாதாரத்துறையின் மருத்துவ ஆய்வக உதவியாளர்கள் நியமனங்கள் வழங்கப்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த நியமனத்தால் பாதிக்கப்பட்ட 270 பட்டதாரிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர்…

தேசபந்து விவகாரத்தில் ரணிலுக்கு எதிராக திரும்பும் விசாரணை..! நீதிமன்றத்தின் முடிவு

அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறித்த மனு செப்டம்பர் 08ஆம் திகதி விசாரணைக்கு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போதுள்ள மழை நிலைமைகள் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், நுவரெலியா,…

துசித ஹல்லோலுவவின் கார் மீது துப்பாக்கிச் சூடு – மேலும் மூவர் கைது

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் விபத்து: ஒருவர் பலி!

இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் இடங்கொட பகுதியில் நேற்று (27) மாலை பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற கெப் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, மேலதிக சிகிச்சைக்காக கிரியெல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

கொழும்பு கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஆர்ப்பாட்ட பேரணியால் கொழும்பு கோட்டை உட்பட பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.போராட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து லோட்டஸ் வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்கின்றனர்.இதனால் வீதியைத் தடுக்க பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளனர்.…