குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள தொரப்பிட்டி தோட்டத்தில் அனுமதியின்றி தேங்காய் பறிக்க தோட்டத்திற்குள் நுழைந்ததற்காக குறித்த நபரை காவலாளி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 துளை துப்பாக்கியுடன் குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *