கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் இன்று (12) காலை நிலவரப்படி நிரம்பியுள்ளதென்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 7 முக்கிய நீர்த்தேக்கங்கள், அனுராதபுரம் மாவட்டத்தில் 6 முக்கிய நீர்த்தேக்கங்கள், பதுளை மாவட்டத்தில் 5 முக்கிய நீர்த்தேக்கங்கள், பொலன்னறுவை மாவட்டத்தில் 3 நீர்த்தேக்கங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 3 நீர்த்தேக்கங்கள் உட்பட மொத்தம் 42 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேரியா, கவுடுல்ல, கந்தளாய், ராஜாங்கன, லுனுகம்வெஹெரை நீர்த்தேக்கங்கள் மற்றும் சேனநாயக்க சமுத்திரம் மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகியவைய இந்த நீர்த்தேக்கங்களில் அடங்கும் என்று திணைக்களம் கூறுகின்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *