
உள்ளூராட்சித் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவைப்பட்டால் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் தற்போது அமைதியாக நடைபெறுவதால் தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உள்ளூராட்சித் தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 3,000 கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க நிறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பாளர்கள் மேலதிகமாக 800 க்கும் மேற்பட்ட நடமாடும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பெபரல் நிர்வாக இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.