இதுவரை 39 நாடுகளுக்கு இலவச விசா வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச விசா வசதிகள் வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று (15) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு மேலும் சில நாடுகளுக்கு விசா வசதியை வழங்குவதன் மூலம், இலவச விசா வசதிகள் வழங்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை 40க்கும் மேல் அதிகரிக்கும். தற்போது, நாங்கள் 39 நாடுகளுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் விசா வசதிகளை வழங்குகிறோம்.

free visa Charge வசதியை வழங்கும் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் சில நாடுகளையும் சேர்க்க யோசனை உள்ளது. அதற்கான வர்த்தமானி தயாரிக்கப்பட்ட பிறகு, இந்த வரவு செலவுத் திட்ட விவாதம் முடிந்ததும் அதை இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.

40க்கும் மேற்பட்ட நாடுகள் free visa Charge வசதியின் கீழ் நமது இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளைப் பெறும். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *