Month: October 2024

நுவரெலியாவில் பாழடைந்த நிலையில் மற்றுமொரு அரச வாகனம் கண்டுபிடிப்பு

முன்னாள் போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிந்ததை இன்று (14) நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாகனம் நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள நுவரெலியா வலயக்…

கொதிகலன் வெடித்து ஒருவர் பலி – 19 பேர் படுகாயம்

கம்பஹா படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இயங்கிய கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்து சிதறியிருக்கலாம் என பொலிஸார்…

இறுவட்டு வடிவில் பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் – தேர்தல் ஆணைக்குழு

2024 பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை இறுவட்டு வடிவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடுகையில், 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இந்த இறுவட்டைப் பெற முடியும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின்…

புலமைப்பரிசில் பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கசிய விடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் வினாத்தாள் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு 6 மாத சிறைத் தண்டணை

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாது மோசடி செய்த சம்பவத்தில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.…

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள்

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.…

சீரற்ற வானிலையினால் 1,00,000துக்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களிலுள்ள 1,00,000துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 1,34,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 240…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 40,658 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை 17,251 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையளம் காணப்பட்டனர். இம்மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில், மேல், சப்ரகமுவ, வடமேற்கு, வடமாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவைச் சூழவுள்ள வளிமண்டலத்தின்…

தொடரும் மழையுடனான காலநிலை – மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரையான காலப்பகுதியில் 1,187 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, காலப்பகுதி வரை 40,598 டெங்கு நோயாளர்கள்…