Month: October 2024

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்லத் தடை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10) தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஜனாதிபதிக்கு சல்மான் பின் அப்துல் அசீசின் வாழ்த்து செய்தி

இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார் , இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி அவர்கள் . ஜனாதிபதித் தேர்தல் வெற்றி வெற்றி தொடர்பில் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸின்…

முன்னாள் மொட்டு இராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவாலுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக ஜனவரி 4, 2025 வரை கணக்குகள்…

பொதுத்தேர்தல் – தபால் மூல வாக்குகளுக்கான திகதி அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளை செலுத்துவதற்கான திகதிகளை இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில்…

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று (10) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலி மாவட்டத்தில்…

பதில் பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினார் அர்ச்சுனா!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10) மதியம் 12 மணியளவில் கட்டுப்பணத்தினை செலுத்தினார். மேலும், வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

பொதுத் தேர்தலுக்காக இதுவரை 88 வேட்பு மனுக்கள் கைச்சாத்து

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 293 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், 88 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல்…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் – நால்வருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு, கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில்…

பிரதமர் ஹரிணி மற்றும் விஜித ஹேரத்தின் உருவப்படங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்படவில்லை – எந்தவொரு நபரும் தங்கள் படத்துடன் கூடிய முத்திரைகளை பெற முடியும் என்ற வகையிலேயே அவர்களுக்கு அவை வழங்கி வைக்கப்பட்டன ; தபால் திணைக்களம் தெளிவு படுத்தியது

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பாக நேற்றுமுதல் பகிரப்படும் பதிவுகள் தொடர்பில் தபால் திணைக்களம் தெளிவு படுத்தியுள்ளது. உலக அஞ்சல் தினத்தை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட…