Month: November 2024

தேர்தல் விதிமுறைகளை மீறிய 9 வேட்பாளர்கள் உள்ளிட்ட 334 பேர் கைது!

பொதுத் தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 9 வேட்பாளர்கள் உள்ளிட்ட 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேட்பாளர்கள் தவிர, தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 325 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லொஹான் – ஷாசிக்கு தொடர்ந்து விளக்கமறியல்

பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷாசி பிரபாவிற்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். இன்று (07) நுகேகொட…

கண்டி பூசகரின் மற்றுமொரு கார் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமாக சொகுசு கார் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கண்டி கல்தென்ன பூசகரின் வாகன கராஜிலிருந்து மற்றுமொரு சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பூசகர் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இக் காரை புலனாய்வு…

அரசியல் ஈடுபாடுகளில் வீழ்ச்சி – பெவரல் நிறைவேற்று பணிப்பாளர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ள போதிலும் 1,000க்கும் குறைவானவர்களே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமை அரசியல் ஈடுபாடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் பெவரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.…

சட்டவிரோத வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட்டுகளுடன் ஒருவர் நேற்று (06) கைதுசெய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவரிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 210 மதுபான போத்தல்கள் மற்றும்…

சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடுகளில் இலங்கைக்கு முதலாமிடம்

லண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கையானது மிகவும் விரும்பத்தக்க தீவுக்கான தங்க விருதை வென்றுள்ளது. இந்தப் பட்டியலில்…

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி!!!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானித்தான் அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஷார்ஜா கிரிக்கெட்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு

2024 க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும், தனிப்பட்ட…

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட உரிமம் பெற்ற துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. துப்பாக்கிகளை மீள கையளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒரு மாத கால அவகாசம்…

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது குறித்து தேர்தல் ஆணைகுழு விசேட அறிவிப்பு

வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ஒரே நெடுவரிசையிலும், ஏனைய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் இரண்டு பத்திகளிலும் அச்சிடப்படுமென தேர்தல் ஆணைக்குழு…