Month: November 2024

திருமலையில் கொலை செய்யப்பட்ட டாக்டரின் மனைவி!

திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனை உரிமையாளரின் மனைவி இன்று (05) அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் படத்துடன் போலி நாணயத்தாள்கள்; ஒருவர் கைது

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த…

தூய்மையான ஆட்சிக்கு மக்கள் சக்தியை தேர்ந்தெடுங்கள்; களுத்துறை வேட்பாளர் அரூஸ் அஸாத்

நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க வை தெரிவு செய்ததைப் போல் ஊழல், இலஞ்சம், வீண் விரயம், அரசியல் பழிவாங்கல்கள் இல்லாத தூய ஆட்சியை முன்னெடுக்க பலமான அரசாங்கத்தையும் தெரிவு செய்வது காலத்தின்…

முஸ்லிம் தலைமைகளை வேரறுக்க தேசிய மாற்றத்துக்குள் சதித்திட்டம்; விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு

முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உலமாக்…

பொதுத் தேர்தல் விதிமீறல்கள் அதிகரிப்பு – இதுவரை 1642 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1642ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1256 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 107…

டிசம்பர் முதல் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகம்

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய இரத்திரனியல்…

கூரிய ஆயுதங்களுடன் இராணுவ சிப்பாய் கைது

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல சந்திக்கு அருகில் பொலிஸ்…

கார் – பஸ் விபத்தில் ஒருவர் பலி

பண்டாரகம பாணந்துறை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் காரும் பஸ்ஸும் மோதியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த ஆடைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நுவாங்கி இந்துனில் என்ற யுவதியே இவ்விபத்தில்…

கரையோர ரயில் போக்குவரத்து தாமதம்

கொஸ்கொட மற்றும் இந்துருவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளமொன்று உடைந்துள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது

கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில்

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வை வழங்காத சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக இன்று (05) காலை 8 மணி முதல் காலி கராப்பிட்டிய…