Month: March 2025

பொலனறுவையில் கனமழை – முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

பொலனறுவை மாவட்டம் உட்பட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும் கவுதுல்ல குளத்தின் 2 வான்…

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எரிபொருள் ஒப்பந்தங்களை மீறும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அறிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் இன்றைய தினமும் சீராக நடைபெறுவதால் அதற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடுமையான மின்னல்,கனமழைக்கு வாய்ப்பு

நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (02) மாலை அல்லது இரவில் பலத்த மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

இரு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இரு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல…

எரிபொருள் பற்றாக்குறையா? – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பது என்ன?

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (02) தொடர்ந்து நடைபெறும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…

இலஞ்சம் பெற முயன்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

கல்னேவ பிரதேசத்தில் பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற முயன்றபோது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (01) இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கல்னேவ பொலிஸ்…

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மஹவெல பொலிஸ் பிரிவின் மில்லவான, லுல்கட பகுதியில் 73 வயது முதியவரை வெட்டி கொலைச் செய்த சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மாத்தளை பிரதேச குற்றவியல் பணியகத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக…

குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது – தேவிகா கொடிதுவாக்கு

நாடளாவிய ரீதியில் உள்ள கிளினிக் நிலையங்களில் கர்ப்பிணித் தாய்மார்களைப் பதிவு செய்வதில் குறைபாடு காணப்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் குறைந்துள்ளது என்றார்.

தேங்காய் விலையில் சரிவு

நாடளாவிய ரீதியில் கடந்த வாரத்தை விட சந்தையில் தேங்காயின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த சராசரி அளவு தேங்காய் ஒன்றின் விலை 200 முதல் 220 ரூபா வரை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள்…

வெளிநாடொன்றில் இலங்கைத் தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய இந்த வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, 18 முதல் 35 வயதுக்கு…