Category: LOCAL NEWS

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவு

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமென பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் உறுதியளித்தார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இரு…

IMFஉடனான வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிட்டும் – உயர்ஸ்தானிகர் Paul Stephens உறுதி

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிட்டும் என்றும், இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை (FDIs) ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பத்துடன் இருப்பதாகவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ் ரீபன்ஸ் (Paul Stephens) தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்…

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேல் மீது ஈரான் நேற்றிரவு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள சகல இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது. இது…

ஊழலற்ற நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசின் முழு ஆதரவு

ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்…

டெங்கு ஒழிப்புக்கான நிபுணத்துவ அறிவை பகிர்ந்துகொள்ள கியூபா இணக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால…

அதி சொகுசு வாகன – பிடியாணை பிறப்பிப்பு

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து சுங்கத்திற்கு 50 பில்லியன் ரூபாவுக்கு மேல் வரி செலுத்தாமல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.…

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2023 (2024) மீள் பரிசீலனை பெறுபேறுகள் மற்றும் இடைநிறுத்தம் செய்து வைக்கப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை வெளியிட்டுள்ளது. உரிய…

பிரமுகர்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் திருத்தம்

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்த முன்மொழிவுகள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும்…

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள்

2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024 செப்டெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப்பகுதியில் 167 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் சட்டங்கள் 146 மற்றும் தனியாள் உறுப்பினர் சட்டங்கள் 21 ஆக 167 சட்டங்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தில்…

பஸ் கட்டணம் குறைப்பு

எரிபொருள் விலையை குறைத்ததால் பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு தமது சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என சங்கம் தெரிவித்துள்ளது.…