பிறப்பு குறைந்து இறப்பு அதிகரிப்பு
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படி, 2019 மற்றும் 2023க்கு இடைப்பட்ட ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 71,110 ஆக குறைந்துள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 34,842 ஆக அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க…
எல்பிட்டிய தேர்தல் – அடையாளமிடும் விரலில் மாற்றம்
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 26.10.2024 அன்று நடைபெற உள்ளது. அதன்போது, வாக்காளரின் இடது கையின் பெருவிரல் இல்லாத பட்சத்தில் வலது கையின் வேறேதாவதொரு விரலில் அடையாளமிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்…
இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டம்
அம்புலுவாவ (Ambuluawa) பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது கேபிள் கார் திட்டத்தின் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையீடுகள் ஏற்படாதவாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பளை (Gampola) உடபலத்த பிரதேச செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.…
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.80 இலட்சம் மோசடி செய்தவர் கைது
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது…
கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் காரில் வந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியில் பயணித்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.…
பிளாஸ்டிக் போத்தல்களை மீள பயன்படுத்தாதீர் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
குடிநீரை சேமித்து வைப்பதற்காக பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. சிலர் இந்த பிளாஸ்டிக் போத்தல்களை தண்ணீர் சேமிப்புக்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், இந்த…
சிறுவர் இல்லத்தின் காவலாளி கொலை – இரு சிறுவர்கள் கைது
கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பணிபுரிந்த காவலாளி ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகள் சிலர், திருட்டு…
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிக்கை
இலங்கையில் உற்பத்திக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த செப்டெம்பரில் 54.1 சுட்டெண் பெறுமதியினை பதிவு செய்துள்ளது. இந்த விடயம் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவான வேகத்தில் விரிவடைதலை வெளிப்படுத்தியதாக…
அலோசியஸின் பிணைமனு மீண்டும் நிராகரிப்பு
WM Mendis and Company Ltd. இன் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் தினேந்திர ஜோன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் நிராகரித்துள்ளது.